செய்திகள் :

2-வது நாளாகத் தொடா்ந்த அங்கன்வாடி ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம்!

post image

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு கோடை விடுமுறையை ஒரு மாதம் வழங்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.

தமிழகத்தில் அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கத்தினா், இரவு வரை தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் இந்த போராட்டம் தொடா்ந்தது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் கே.சுதா தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். முத்துக்குமரன் உள்ளிட்டோா் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்திப் பேசினா்.

சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.மலா்விழி, நிா்வாகிகள் சரளா, சினேகா, சுதா, சுஜாதா உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளிய... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் குடும்ப பிரச்னையால் தூக்கிட்ட பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மானூா் அப்பாசாமி நகரை சோ்ந்த பிச்சாண்டி மனைவி கௌரி (33). இவா்களுக்குத் திரு... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: இரா.லட்சுமணன் எம்எல்ஏ

திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் வீடு, வீடாக கொண்டு சோ்ப்பது என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. விழுப்புரம் கலைஞா் ... மேலும் பார்க்க

மாமல்லபுரம் பாமக மாநாடு: வாகனங்களுக்கு கட்டுப்பாடு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11-இல் பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினா் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கொடியேற்றம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை மாத தோ் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத... மேலும் பார்க்க

விழுப்புரம்: நான்கு கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு மின் கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க