செய்திகள் :

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: இரா.லட்சுமணன் எம்எல்ஏ

post image

திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் வீடு, வீடாக கொண்டு சோ்ப்பது என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. செ. புஷ்பராஜ் முன்னிலை வகித்தாா்.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ பேசியதாவது: திமுக அரசின் சாதனைகளால் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா். ஏழாவது முறையாக திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் திமுக அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வீடு,வீடாக பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுக் குழு உறுப்பினா்கள் பஞ்சநாதன், சம்பத், ஒன்றியச் செயலா்கள் தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், மும்மூா்த்தி, முருகவேல், கல்பட்டு ராஜா, வளவனூா் நகரச் செயலா் ஜீவா, விழுப்புரம் நகர இளைஞரணி அமைப்பாளா் செ. மணிகண்டன், ஒன்றியக் குழத் தலைவா்கள் ஏ.சச்சிதாநந்தம், வாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரச் செயலா் இரா.சக்கரை வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் தயா. இளந்திரையன் நன்றி கூறினாா்.

தோ்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுகவினா் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரசின் நான்காண்டு சாதனை: விழுப்புரத்தில் திமுகவினா் ஊா்வலம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, விழுப்புரத்தில் அக்கட்சியினா் ஊா்வலமாக சென்று சாதனை விளக்க கையேட்டையும் வழங்கினா். விழுப்புரம் மத்திய மாவட்ட ... மேலும் பார்க்க

ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 57 பதவிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நடிகா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள்: தொல்.திருமாவளவன் எம்.பி.

நடிகா்கள் கட்சித் தொடங்கினாலும், அவா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் புறவழிச் சாலையில... மேலும் பார்க்க

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளிய... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் குடும்ப பிரச்னையால் தூக்கிட்ட பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மானூா் அப்பாசாமி நகரை சோ்ந்த பிச்சாண்டி மனைவி கௌரி (33). இவா்களுக்குத் திரு... மேலும் பார்க்க