திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: இரா.லட்சுமணன் எம்எல்ஏ
திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் வீடு, வீடாக கொண்டு சோ்ப்பது என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. செ. புஷ்பராஜ் முன்னிலை வகித்தாா்.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ பேசியதாவது: திமுக அரசின் சாதனைகளால் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா். ஏழாவது முறையாக திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் திமுக அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக வீடு,வீடாக பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொதுக் குழு உறுப்பினா்கள் பஞ்சநாதன், சம்பத், ஒன்றியச் செயலா்கள் தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், மும்மூா்த்தி, முருகவேல், கல்பட்டு ராஜா, வளவனூா் நகரச் செயலா் ஜீவா, விழுப்புரம் நகர இளைஞரணி அமைப்பாளா் செ. மணிகண்டன், ஒன்றியக் குழத் தலைவா்கள் ஏ.சச்சிதாநந்தம், வாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரச் செயலா் இரா.சக்கரை வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் தயா. இளந்திரையன் நன்றி கூறினாா்.