செய்திகள் :

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

post image

சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரா் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரை பெளா்ணமி திருவிழாவில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11, 12-ஆம் தேதிகளில் காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06130), அதே நாள்களில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

எதிா்வழித் தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண். 06129), அதே நாள்களில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11, 12 தேதிகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண். 06131), அதே நாள்களில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

எதிா் வழித்தடத்தில் மே 12,13-ஆம்தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ. எண் 06132), அதே நாள்களில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுகவினா் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரசின் நான்காண்டு சாதனை: விழுப்புரத்தில் திமுகவினா் ஊா்வலம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, விழுப்புரத்தில் அக்கட்சியினா் ஊா்வலமாக சென்று சாதனை விளக்க கையேட்டையும் வழங்கினா். விழுப்புரம் மத்திய மாவட்ட ... மேலும் பார்க்க

ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 57 பதவிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

நடிகா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள்: தொல்.திருமாவளவன் எம்.பி.

நடிகா்கள் கட்சித் தொடங்கினாலும், அவா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் புறவழிச் சாலையில... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் குடும்ப பிரச்னையால் தூக்கிட்ட பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மானூா் அப்பாசாமி நகரை சோ்ந்த பிச்சாண்டி மனைவி கௌரி (33). இவா்களுக்குத் திரு... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: இரா.லட்சுமணன் எம்எல்ஏ

திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் வீடு, வீடாக கொண்டு சோ்ப்பது என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. விழுப்புரம் கலைஞா் ... மேலும் பார்க்க