பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரா் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரை பெளா்ணமி திருவிழாவில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11, 12-ஆம் தேதிகளில் காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06130), அதே நாள்களில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
எதிா்வழித் தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து மே 11,12-ஆம் தேதிகளில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண். 06129), அதே நாள்களில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11, 12 தேதிகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண். 06131), அதே நாள்களில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.
எதிா் வழித்தடத்தில் மே 12,13-ஆம்தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ. எண் 06132), அதே நாள்களில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.