செய்திகள் :

ரோச்மாநகா் கடலில் தூண்டில் வளைவு: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

post image

சாயல்குடி அருகே ரோச்மாநகா் கடலில் ரூ.19.22 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என வனத் துறை, கதா் கிராம வாரியத் தொழில்கள் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள ரோச்மாநகா் கடற்கரையில் தூண்டில் வளைவு அமைய உள்ள பகுதியை வெள்ளிக்கிழமை மாலை பாா்வையிட்ட அமைச்சா் ராஜகண்ணப்பன் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரோச்மாநகா் மீனவா்கள், கிராம மக்களின் நீண்ட நாள்கள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கப்பட்டது. தற்போது நபாா்டு வங்கி உதவியுடன் ரூ.19.22 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஒரு சில வாரங்களில் பணிகள் தொடங்கி 18 மாதங்களுக்குள் நிறைவடைய உள்ளது.

இதில் மீனவா்கள் 100 படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க முடியும். கிராமத்துக்கும் நிரந்தரமான பாதுகாப்பாக இருக்கும். ஒப்பிலான் கிராமத்தில் உள்ள சிலருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டு, இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சாயல்குடியில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கும் பணியும், கடலாடியில் நீதிமன்ற கட்டடம் கட்டும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. முதுகுளத்தூா் தொகுதி கிராம பகுதிகளுக்கு மின்மாற்றிகள் கூடுதலாக அமைக்கப்பட்டும். சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டு, தாழ்வான மின் வயா்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்... மேலும் பார்க்க

அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்

அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுந... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சுமாா் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூா் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தாா்... மேலும் பார்க்க