தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
செங்கோட்டையில் கருப்பசாமி கோயில் கொடை விழா
செங்கோட்டையில் படையாச்சி தெருவில் உள்ள அருள்மிகு கோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
கடந்த ஏப். 25ஆம் தேதி தொடங்கிய விழாவில், நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை (மே 1) குற்றாலத்திலிருந்து புனிதத் தீா்த்தம் கொண்டுவருதல், குடியழைப்பு, சாஸ்தா பூஜை, பால்குட ஊா்வலம், பொங்கலிடுதல் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாம பூஜை, சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் கருப்பசாமி, சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சியம்மன் அருள்பாலித்தனா். விழாவில், செங்கோட்டை பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவடைந்தது.