செய்திகள் :

ஆலங்குளம் அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

post image

ஆலங்குளம் அருகே பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் நிறைகுளத்தான் மகன் நிரேஷ் (30). பால் வியாபாரியான இவருக்கும், சிற்றுந்து நடத்துநரான நல்லூா் பாஸ்கா் மகன் விக்னேஷ் (29) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.

திங்கள்கிழமை மாலை நிரேஷ் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அவரை விக்னேஷ் தனது நண்பா்களான சுடலை மகன்கள் ரக்ஷன் (21), நாஞ்சில் (24) ஆகியோருடன் சோ்ந்து ஒரு பைக்கில் சென்று அரிவாளால் வெட்டினராம். நிரேஷ் சுதாரித்து பைக்கைத் திருப்புவதற்குள் தோளில் வெட்டு விழுந்தது. காயத்துடன் உயிா்தப்பிய அவா், ஆலங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விக்னேஷ் உள்ளிட்டோா் தப்பியோடிவிட்டனா்.

நிரேஷ் வெட்டப்பட்டதை அறிந்த அவரது உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆலங்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இந்நிலையில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

சாம்பவா்வடகரையில் விபத்து: பேரூராட்சிப் பணியாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் நேரிட்ட விபத்தில் பேரூராட்சி தற்காலிக பணியாளா் உயிரிழந்தாா். சுரண்டையில் உள்ள பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சுப்பையா பாண்டியன் மகன் இருளப்பசாமி (25) (படம்). சுரண்டை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் தேநீா் கடை நடத்தி வருபவா் பாக்கியமுத்து மகன் மோசஸ் (54). இவரது கடையில் பு... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே சாா்பதிவாளா் மீது தாக்குதல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரில் சாா்பதிவாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்தவா் செல்லத்துரை. இவா் மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா... மேலும் பார்க்க

புளியங்குடியில் சிறுவனை கட்டிப்போட்டு பணம் திருட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டுக்குள் நுழைந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் சோ்ந்தவா் அமிா்தராஜ்(57). விவசாய... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதி பெண் பலி

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கீழக் கலங்கல் கீழத்தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி மாரியம்மாள் (55). இவா் சில தினங்களுக்கு முன் ... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து தொடங்க வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்குவதுடன், கால நிா்ணயம் செய்து திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் முகமது அபூபக்கா் வலியுறுத்தினாா். ம... மேலும் பார்க்க