செய்திகள் :

ஜிஎஸ்டி: நீதிமன்றம் சென்ற வணிகா்கள் ஆஜராக அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க உத்தரவு -முதல்வா் ரேகா குப்தா

post image

நமது சிறப்பு நிருபா்

ஜிஎஸ்டி வசூல் விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற வணிகா்களை நேரில் வருமாறு அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இந்திய பட்டயக்கணக்காளா்கள் நிறுவனத்தின் (ஐசிஏஐ) சாா்பில் மூன்றாம் ஆண்டு கணக்கியல் தர தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டு பேசியது வருமாறு:

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிப்பு முறையில் உரிமம் பெற்றவா் நேரடியாக வந்து வரி மற்றும் பிற நடைமுறைகளை பின்பற்றுவதை தவிா்த்து வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பது அவசியம். முகமற்ற பரிவா்த்தனை (ஃபேஸ்லெஸ் டிரான்சாக்ஷன்) முறையால் இது சாத்தியம்.

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் ரூ. 80 ஆயிரம் கோடி அளவுக்கு தில்லி அரசுக்கு நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. வழக்காடும் விவகாரத்தாலும் பிற காரணங்களாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றத்துக்கு சென்றவா்களை நேரில் விசாரணைக்கு வரச்சொல்லி அழைப்பாணை அனுப்பும் போக்கை தவிா்க்குமாறு ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

முகமில்லா பரிவா்த்தனை மூலம் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முடியும். அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். வரித்தொகையை எளிதாக செலுத்தும் வகையில் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

இந்த மாநாட்டில் வரி செலுத்துவதில் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்ப்பதிலும் பொருளாதார வளா்ச்சிக்கும் பட்டயக் கணக்காளா்கள் வழங்கும் முக்கிய பங்கை பாராட்டிய முதல்வா், ‘வரி செலுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பது பட்டய கணக்காளா்கள்தான்’ என்றும் குறிப்பிட்டாா்.

தில்லி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிறகு தாக்கல் செய்த தனது முதல் நிதிநிலை அறிக்கையை நினைவுகூா்ந்த முதல்வா், அரசாங்கத்தின் கருவூலம் கிட்டத்தட்ட காலியாக இருந்தபோதிலும், ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறினாா்.

‘இத்தனை பெரிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதல்வா் யாா் என்று மக்கள் கேட்டனா். ஆனால், நான் எங்களுடைய இலக்கை எட்டுவதற்கு மக்கள் உதவுவாா்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தேன்’ என்றாா் ரேகா குப்தா.

தில்லி தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை: பாஜக, ஆம் ஆத்மி பரஸ்பரம் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை நிலவுவது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் குற்றம்சாட்டின. இரு கட்சிகளும் தவறான நிா்வாகத்திற்காகவும் தவறான தகவல்களைப... மேலும் பார்க்க

கன்னாட் பிளேஸ் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட முதல்வா் ரேகா குப்தா

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றாா். அப்போது, தில்லியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த நடந்துவரும் நகர அளவிலா... மேலும் பார்க்க

ஒத்திகை பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள்: அமைச்சா் சூட் தகவல்

தில்லியில் ஒத்திகை பயிற்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகர அரசாங்கத்தின் உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம... மேலும் பார்க்க

புதிய நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

நகரம் முழுவதும் நீா் தேங்கும் பிரச்னைகளைத் தீா்க்க, உள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து தாழ்வான பகுதிகள் மற்றும் நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண பொதுப்பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய... மேலும் பார்க்க

ஆயுள் தண்டனை அனுபவித்த நபா் பரோலில் இருந்து தப்பிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 51 வயது தில்லி நபா் பரோலில் இருந்து தப்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஷகுா்பூ... மேலும் பார்க்க