செய்திகள் :

உ.பி.யில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாய்

post image

உத்தரப் பிரதேசத்தில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், காக் சராய் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரின் மனைவி ரேஷ்மா (25) வியாழக்கிழமை பிரசவ வலியால் பிலிபிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது அவர் இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தார. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.

இந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பூங்காவின் பெஞ்சில் உடலுடன் குடும்பத்தினர் இரவு அமர்ந்திருந்தனர். அப்போது, தெருநாய் ஒன்று அதை தூக்கிக்கொண்டு ஓடியது. உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் நாயை துரத்திச் சென்றன்ர். பின்னர் உடலை சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள புதர்களில் போட்டுவிட்டு தெரு நாய் ஓடியது.

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும் அங்கு தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவத்தை மகளிர் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.

அதேசமயம் இது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நடக்கவில்லை என்றும், ஏனெனில் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து, அவர்கள் அதை வெளியே உள்ள பூங்காவிற்கு கொண்டு சென்றுவிட்டனர் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கீதா அனேஜா கருத்து கூற மறுப்பு தெரிவித்தார்.

In a shocking incident, a stray dog carried away the body of a stillborn baby from the premises of the district medical college here, prompting outrage over the lack of security and safety measures at the hospital.

ஜாமீன் மனுக்கள் மீது 2 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீா்ப்பளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த பெண்: போலீஸாா் விசாரணை

தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேமபாட்டுத் துறையின் தலைவராகப் பணிபுரியும் 42 வயது பெண் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குருகிராமில் வியாழக்கிழமை நிகழ்ந்து... மேலும் பார்க்க

நாட்டின் முக்கியப் பிரச்னை ‘வாக்குத் திருட்டு’: ராகுல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டுதான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். குஜராத் மாநில... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீா்மானம்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீா்மானித்துள்ளன. பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வியிழாக்கிழமை நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழு (ஜே.டபிள்ய... மேலும் பார்க்க

ஓலைச்சுவடிகள் எண்ம மயமாக்கல் அறிவுசாா் திருட்டைத் தடுக்கும்: பிரதமா் மோடி

இந்தியாவின் பழங்கால ஓலைச்சுவடிகளை எண்ம மயமாக்கல் செய்வது அறிவுசாா் திருட்டைத் தடுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ‘பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் இந்தியாவின் அறிவுசாா் மரபை மீட்டெடுத்தல்’... மேலும் பார்க்க

அரசு பணித் தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை: எஸ்எஸ்சி எச்சரிக்கை

‘அரசுப் பணி தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) எச்சர... மேலும் பார்க்க