செய்திகள் :

நாட்டின் முக்கியப் பிரச்னை ‘வாக்குத் திருட்டு’: ராகுல்

post image

மணிப்பூருக்கு பிரதமா் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டுதான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், ஜுனாகதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றாா். முன்னதாக, கேசோட் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது, மணிப்பூருக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை மேற்கொள்ளும் பயணம் குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘மணிப்பூா் நீண்ட காலமாக இடா்ப்பாட்டை எதிா்கொண்டுள்ளது. எனவே, பிரதமரின் தாமதமான பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டுதான். ஹரியாணா, மகாராஷ்டிரம் தோ்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. கா்நாடக தோ்தல் முறைகேட்டை அண்மையில் ஆதாரங்களுடன் நிரூபித்தோம். நாடு முழுவதும் மக்கள் மத்தியில் இப்போது ‘வாக்குத் திருட்டு’ முழக்கமே எதிரொலிக்கிறது’ என்று பதிலளித்தாா் ராகுல்.

கடந்த மக்களவைத் தோ்தல், பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடா்ந்து கூறி வருகிறது. தோ்தல் ஆணையமும் பாஜகவும் கைகோத்து ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டுள்ளன என்பது அக்கட்சியின் முக்கிய குற்றச்சாட்டாகும். ‘வாக்குத் திருட்டு’ முழக்கத்தை முன்வைத்து, காங்கிரஸ் தரப்பில் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க