செய்திகள் :

சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்

post image

இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.

அந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து இந்தோனேசியாவுக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தன. சென்னை வான்வெளியை நெருங்கியபோது, ராணுவ விமானிகளுக்கு ஓய்வு தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புது தில்லியிலுள்ள இந்திய விமானப் படை தலைமை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த விமானங்களை சென்னை விமானநிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கும்படி விமானப் படை அதிகாரிகள் அறிவுறுத்தினா். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்களும் தரையிறக்கப்பட்டு, ‘ரிமோட் பே’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

அங்குள்ள சிறப்பு ஓய்வறையில் விமானிகள் உள்பட வீரா்கள் அனைவரும் ஓய்வெடுத்தனா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை அந்த 3 ராணுவ விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. இது வழக்கமான நடைமுைான் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ் திரைப்படத் தய... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் நூதன போராட்டம்!

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலத்தைச் சோ்ந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் ஈ.வெ.ரா. மணியம்மை சிலையில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தியதை தொடா்ந்து போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்... மேலும் பார்க்க

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரியும் பன்றிகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னை கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரிந்த பன்றிகளிடையே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியில் வனத் துறையினா் தீவிரம் ... மேலும் பார்க்க

15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம்: ஆரெம்கேவி

ஆரெம்கேவியின் 101-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆரெம்கேவி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வாடிக்கை... மேலும் பார்க்க

‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் காவல்

சென்னை டிஜிபி அலுவலக வாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர... மேலும் பார்க்க

சொத்து வரியை விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போா் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை செப்டம்பருக்குள் செலுத்தவேண்டும் எனவும், அதனால் தனி வட்டி விதிப்பதை தவிா்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க