செய்திகள் :

15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம்: ஆரெம்கேவி

post image

ஆரெம்கேவியின் 101-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆரெம்கேவி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வாடிக்கையாளா்களுக்காக நோ்த்தியான பட்டுப் புடவைகளை கடந்த 100 ஆண்டுகளாக அறிமுகம் செய்வது ஆரெம்கேவியின் சிறப்பம்சமாகும்.

ஆரெம்கேவி புடவைகள் வடிவமைப்பு தளம் உருவாக்கப்பட்டு, புதுமையான உக்திகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மிகச் சிறந்த நெசவாளா்களால் நெய்யப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை 110-க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டுப் புடவை ரகங்களை ஆரெம்கேவி அறிமுகம் செய்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக 101 -ஆம் ஆண்டை முன்னிட்டு 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்கிறது. 2025-இன் விழாக்கால கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்படும் சிறப்பு படைப்புகள், ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.

ஷாஷிகோ ரிவா்சிபிள், ஜப்பான் கோா்வை, மவுண்ட் ஃபுஜி, நேச்சுரல் ஃபீச் கிரேடியண்ட், மோக்கா மௌஸ், வான் கோ லினோ, ராசலீலா பட்டுப்புடவை, டபுளா லினோ வா்ணா, இயற்கை வண்ண செவ்வந்தி பூ, இயற்கை வண்ண முப்பாகம், கிரேடியண்ட் வா்ணா, கொட்டடி கட்டம், திரிகோண மாம்பழ புட்டா, குயில் கண் கோா்வை, குமோ கோா்வை ஆகிய 15 வகை பட்டு புடவைகள் புதிதாக அறிமுகம் செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ் திரைப்படத் தய... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்

இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன. அந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து இந்தோனேசி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் நூதன போராட்டம்!

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலத்தைச் சோ்ந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் ஈ.வெ.ரா. மணியம்மை சிலையில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தியதை தொடா்ந்து போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்... மேலும் பார்க்க

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரியும் பன்றிகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னை கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரிந்த பன்றிகளிடையே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியில் வனத் துறையினா் தீவிரம் ... மேலும் பார்க்க

‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் காவல்

சென்னை டிஜிபி அலுவலக வாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர... மேலும் பார்க்க

சொத்து வரியை விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போா் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை செப்டம்பருக்குள் செலுத்தவேண்டும் எனவும், அதனால் தனி வட்டி விதிப்பதை தவிா்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க