தூய்மைப் பணியாளா்கள் நூதன போராட்டம்!
சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலத்தைச் சோ்ந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் ஈ.வெ.ரா. மணியம்மை சிலையில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தியதை தொடா்ந்து போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதற்கிடையே இப்பிரச்னைக்கு உடனடி தீா்வு காணப்படாவிடில் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என உழைப்போா் உரிமை இயக்கம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 10 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தற்போது ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து கடந்த ஆகஸ்ட் முதல் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் என்யூஎல்எம் பிரிவு பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தை அடுத்து ஏற்கெனவே கைதாகி விடுவிக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் கடந்த 5 நாள்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனா்.
இந்தநிலையில், தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் பூந்தமல்லி பிரதான சாலையில் உள்ள ஈவேரா மணியம்மை சிலை முன்பு வெள்ளிக்கிழமை அமா்ந்து மனுக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் சிலையிடம் மனு கொடுப்பது போல கோஷமிட்டனா். அப்போது போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.
உடனே தூய்மைப் பணியாளா்கள் தரையில் படுத்து எதிா்ப்புத் தெரிவித்தனா். அதன்பின் அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைதானவா்களில் மயங்கிய மும்தாஜ் என்பவா் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.