செய்திகள் :

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த பெண்: போலீஸாா் விசாரணை

post image

தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேமபாட்டுத் துறையின் தலைவராகப் பணிபுரியும் 42 வயது பெண் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குருகிராமில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை ஃபெரோஸ் காந்தி காலனி அருகே நடந்தது. தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல, ரைடு-ஹெய்லிங் செயலி மூலம் ஆட்டோவை அந்த பெண் முன்பதிவு செய்திருந்தாா். பயணத்தின் போது, மதுபோதையில் இருந்த ஓட்டுநா் அவரது கையைப் பிடித்து, அவரது மடிக்கணினிப் பையைப் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

பீதியில், அந்தப் பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்து காயமடைந்தாா். சம்பவம் நடந்த உடனேயே ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

தப்பியோடியதைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25-க்கும் மேற்பட்ட முறை போன் செய்து ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

நியூ காலனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ரைடு-ஹெய்லிங் நிறுவனம் ஓட்டுநரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது. விசாரணையைத் தொடங்கி, ஓட்டுநரின் பின்னணி உள்பட வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சாா்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு மற்றும் முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு... மேலும் பார்க்க

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்: அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

புது தில்லி, செப்.12: நடப்புக் கணக்கு சேமிப்புக் கணக்கை மேம்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறைக்கு வழங்கும் கடனை அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

1,107 எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினா்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவா்கள் என்று ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், ‘தேசிய க... மேலும் பார்க்க

42 பேரை படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோத கும்பல்!

ஹைட்டியில் சட்டவிரோத கும்பலைச் சோ்ந்தவா்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: லாபோட்ரீ கிராமத்தில் சட்டவிரோத கும்பல் நடத்திய தாக்குதலி... மேலும் பார்க்க