செய்திகள் :

உ.வே.சா. பிறந்த நாள் விழா: உத்தமதானபுரத்தில் ஆட்சியா் மரியாதை

post image

நீடாமங்கலம்: தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் 171 ஆவது பிறந்த நாள் விழா பல்வேறு தமிழ் அமைப்புகளால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா. நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் வே. வ.மோகனசந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உ.வே.சாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் பல்கலை பதிவாளர் பணி நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

‘தமிழ்த் தாத்தா என சிறப்பிக்கப்படும் உ.வே.சா. ஓலைச் சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களை அச்சிலேற்றி அதற்கு உயிா் கொடுத்தவா். ஓலைச் சுவடிகளை ஊா் ஊராகச் சென்று சேகரித்தவா். தீயில் எரிந்ததையும், ஆற்று நீரில் சென்றதையும் எடுத்து பாதுகாத்து, ஓலைச் சுவடிகளில் இருந்த எழுத்துகளை முறைப்படுத்தி, இலக்கியங்களை முழுமையாக்கி கொடுத்த தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். ஆசிரியா் - மாணவா் உறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவா்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சா குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.’

அவரது பிறந்த நாளான இன்று உத்தமதானபுரம் கிராமத்தில் உ.வே.சா இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்... மேலும் பார்க்க

கோபியில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.கோபிச்செட்டிப்பாளையத்தி... மேலும் பார்க்க