செய்திகள் :

ஊட்டி: `விடைத்தாள் இல்லை என தேர்வு ரத்து’ - கலெக்டர் தலைமையில் இயங்கும் பள்ளியின் அவலம்

post image

பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் தொடங்கப்பட்ட பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி 150 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்லாத காரணத்தால் 10- ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வை ரத்து செய்த விவகாரம் பெற்றோரையும் ஊட்டி மக்களையும் கொத்திப்படையைச் செய்திருக்கிறது.

வழிந்தோடும் கழிவுநீர்

இரண்டு தினங்களுக்கு முன்பு பிரீக்ஸ் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு பங்கேற்றிருந்த நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆட்சியிரடம் இது குறித்து கேள்வி எழுப்பயுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத மாவட்ட ஆட்சியர் மழுப்பலான பதிலைச் சொல்லி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

இது குறித்து தெரிவித்த பிரீக்ஸ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், " பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விடைத்தாள் வாங்க பணம் இல்லை என கூறுகின்றனர். சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை கோடிக்கணக்கில் உள்ளது. மேலும் ,பள்ளிக்குச் சொந்தமாக தாவரவியல் பூங்கா பார்க்கிங் தலம் மூலம் கிடைக்கும் வருவாயும் உள்ளது.

பிரீக்ஸ் பள்ளியில் மாவட்ட ஆட்சியர்

ஆனால், விடைத்தாள் வாங்க பணம் இல்லையென கூறப்படுவது அபத்தமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பள்ளி நிர்வாகம் முறையாக நடைபெறுவதில்லை.

கழிவறைகள் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வகுப்பறை முன்னால் கழிவுநீர் வழிந்தோடுகிறது. சுகாதாரமற்ற கழிப்பிடத்தை பயன்படுத்தும் மாணவர்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். கலெக்டர் தலைமையில் இயங்கும் பழைமை வாய்ந்த பள்ளியின் நிலை வேதனை அளிக்கிறது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்" என்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.!

Dog Bite: `நாய் கடி பிரச்னையில் தமிழ்நாடு 2-வது இடம்..' -அரசு சொல்வதென்ன?

இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சுமார் 22 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் ... மேலும் பார்க்க

ஹஜ் பயணம்: `குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை' - காரணம் என்ன? - விளக்கும் சவுதி அரேபியா!

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளின் ஒன்று மக்கா செல்வது. வசதியும், உடல் ஆரோக்கியமும் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிப்பாக மக்கா சென்று ஹஜ் செய்ய வேண்டும். இந்த நிலையில், சவூதி அரேபியா அரசு இந்த ஆண்டு... மேலும் பார்க்க

Corruption: `லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகள்..' -இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

2024-ம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் குறியீட்டில் (Corruption Perceptions Index - CPI) இந்தியா 96-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளின் ஊழல் லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparenc... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டில் குவிந்த அதிமுக நிர்வாகிகள் -அவரச ஆலோசனையா? -பரபரப்பில் அதிமுக

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமை... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு -பின்னணி என்ன?

அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், ... மேலும் பார்க்க

Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, கனடா மீது வரி, மெக்சிகோ மீது வரி, சீனா மீது வரி... என்று வரிகளை அடுக்கிக்கொண்டு போனார் ட்ரம்ப்.அப்போது அவர் பேசுகையில், "இந்தியா, அமெரிக்கா பொருட்கள் மீது அ... மேலும் பார்க்க