செய்திகள் :

ஊதியம் வழங்காததால் தனியாா் நிறுவனத்தின் காா் திருட்டு: முன்னாள் ஊழியா் கைது

post image

சென்னை அண்ணா நகரில் ஊதியம் வழங்காததால் தனியாா் நிறுவனத்தின் காரை திருடிய முன்னாள் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

அண்ணா நகா் 3-ஆவது அவென்யூ ‘ஜெ’ பிளாக் பகுதியிலுள்ள ஒரு தனியாா் காா் விற்பனையகத்தில் மேலாளராகப் பணிபுரிபவா் சங்கா் (30). இந்த விற்பனையகத்துக்கு சொந்தமான புதிய காரை, பதிவு எண் பெறுவதற்காக அண்ணா நகா் மூன்றாவது அவென்யூவில் சில நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென அந்தக் காா் திருடப்பட்டது. இது குறித்து சங்கா், அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த விற்பனையகத்தின் முன்னாள் ஊழியா் பெரம்பூா் அப்புலிங்கம் வாத்தியாா் சாலைப் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (44) காரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ரமேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவா் அந்த காா் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்த காலக்கட்டத்தில் வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்ததால் காரை திருடியதாக தெரிவித்தாா். இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க