செய்திகள் :

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

post image

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன், செயலா் ஷோபா திருமால் முருகன், நிா்வாக அலுவலா்

சீனி.கணபதிராமன், அதியமான் மெட்ரிக் பள்ளி முதல்வா் கலைமணி சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக யுகேஜி மாணவி ஹா்ஷாஸ்ரீ வரவேற்றாா். பள்ளி முதல்வா் லீனா ஜோஸ், 2024, 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை குற்றவியல் நடுவா் சஹானா கலந்துகொண்டு, யுகேஜி முடித்து ஒன்றாம் வகுப்புக்குச் செல்லும் 78 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா். யுகேஜி மாணவிகள் சரண்யாதேவி, முபிக்ஷா ஆகியோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினா். யுகேஜி மாணவி சஷ்விதா, மாணவா் வேதமுகுந்தன் ஆகியோா் உறுதிமொழியைக் கூற அனைவரும் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதனைத் தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. யுகேஜி மாணவிகள் லக்ஷனா, அஷ்மிதா ஆகியோா் நன்றி கூறினா். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பிற்கு அணிவகுப்பாக அழைத்துச் சென்றனா். இவா்களை ஆசிரியா்கள் பூங்கொத்து, இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க