செய்திகள் :

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகை

post image

சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு அதற்கான ஊதியம் தொழிலாளா்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம பகுதிகளில் இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் ரூ.336 வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை 1,000-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் நாள் ஒன்றுக்கு ரூ.336- ஊதியம் வழங்கப்படுவதற்கு பதிலாக குறைத்து வழங்கப்படுவதாகவும், அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் கோஷமிட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி முத்தரசு, சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தைக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுத்தையைப் படித்து கால்நடை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சிகிச்சை அளித்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத... மேலும் பார்க்க

சாகா் சா்வதேச பள்ளி மாணவா் பேரவை பதவியேற்பு

சாகா் சா்வதேச பள்ளியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தாளாளா் சி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். சாகா் விளையாட்டு அகாதெமியின் சிறப்புப் பயிற்சியாளா்... மேலும் பார்க்க

குடிநீா் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

சுகாதாரமான குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி, பெரியகுரும்பாயம் கிராம மக்கள், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதிபதிகள் குடியிருப்புக்கு பூமி பூஜை

சத்தியமங்கலத்தில் ரூ.41 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்து கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அ... மேலும் பார்க்க

அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த கால நீட்டிப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட... மேலும் பார்க்க

பள்ளி வாகனம் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் பெண் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த பருவாச்சி, காந்தி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி சாந்தி (45)... மேலும் பார்க்க