ஊரை விட்டு விலக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
முதுகுளத்தூா் கொழுந்துரை கிராமத்தில் 13 குடும்பங்களை சோ்ந்த 50- க்கும் மேற்பட்டவா்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் கொழுந்தரை பகுதியில் ஒரே சமூதாயத்தைச் சோ்ந்தவா்கள் கிராமத் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 13 குடும்பங்களைச் சோ்ந்தவா்களை ஊரை விட்டு விலக்கி வைத்ததுடன், அவா்களுடன் யாரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது.
அவ்வாறு கலந்து கொண்டால் அவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனா். இதுகுறித்து காவல் துறையிடம் புகாா் அளித்தும் தற்போது வரையில் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதைக் கண்டித்து, 13 குடும்பத்தினரை ஊரை விட்டு விலக்கி வைத்த கிராமத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.