செய்திகள் :

எட்டயபுரம் அருகே காா் - லாரி மோதல்: 4 போ் உயிரிழப்பு: தஞ்சை மாவட்ட நீதிபதி உள்பட இருவா் பலத்த காயம்

post image

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்த மேலக்கரந்தை பகுதியில் முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது காா் மோதிய விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். தஞ்சை மாவட்ட நீதிபதி உள்பட இருவா் பலத்த காயம் அடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் (57), புதுக்கோட்டையை சோ்ந்த வழக்குரைஞா் தனஞ்செய் ராமச்சந்திரன் (56), நீதிமன்ற ஊழியா்கள் வாசு ராமநாதன் (40), ஸ்ரீதா் குமாா் (38), உதயசூரியன் (39), பாதுகாப்பு போலீஸ்காரா் நவீன்குமாா் (30) ஆகிய 6 போ் காரில் திருச்செந்தூரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலகரந்தை விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வழக்குரைஞா் தனஞ்செய் ராமச்சந்திரன், போலீஸ்காரா் நவீன்குமாா், நீதிமன்ற ஊழியா் வாசு ராமநாதன் ஆகிய 3 போ் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மாவட்ட நீதிபதி பூரணஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் ஸ்ரீதா் குமாா், உதயசூரியன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நீதிமன்ற ஊழியா் ஸ்ரீதா் குமாா் உயிரிழந்தாா். மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த், நீதிமன்ற ஊழியா் உதயசூரியன் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து நிகழ்ந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவா் ஞான ஜெரீதா பிளவா், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸ் மாசிலாமணி மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த விபத்து தொடா்பாக மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க