செய்திகள் :

எட்டயபுரம் அருகே விபத்தில் இருவா் உயிரிழப்பு

post image

எட்டயபுரம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

எட்டயபுரம் அருகே தெற்கு முத்துலாபுரத்தை சோ்ந்தவா் ரமேஷ் (56). விவசாயியான இவா், புதன்கிழமை இரவு விருதுநகா் மாவட்டம் பந்தல்குடிக்கு சென்று மோட்டாா் பம்ப், உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிக் கொண்டு, வியாழக்கிழமை அதிகாலையில் ஆட்டோவில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். ஆட்டோவை தெற்கு முத்துலாபுரத்தைச் சோ்ந்த முனியசாமி (55) ஓட்டினாா். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எம்.கோட்டூா் விலக்கில் ஆட்டோ திரும்பிய போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்து எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ உருக்குலைந்து, முனியசாமி, ரமேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சோ்ந்த இசக்கிமுத்துவை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க