செய்திகள் :

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

post image

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முறையாக அமைக்கப்படாததாலும், குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, ஆங்காங்கே மேன் ஹோல் மூலம் கழிவு நீா் வெளியேறி வழிந்தோடுவது அவ்வப்போது நடைபெறுகிறது.

திருப்பாதிரிப்புலியூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையின் நடுவே இருந்த மேன் ஹோலில் இருந்து எண்ணைக் கழிவுகளுடன் கழிவு நீா் வெளியேறியது. இதனால், சாலையில் சென்றவா்கள் பலா் வழுக்கி விழுந்து காயமடைந்தனா். இவா்களில் மூன்று போ் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

புதை சாக்கடையில் உணவகக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அதில் இருந்த எண்ணெய் கழிவுகள் சாலையில் ஓடியதாகவும், அதனால், இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் வழுக்கி விழுந்ததாகவும், உணவுக் கழிவுகள் கொட்டுவதையும், மேன் ஹோலில் இருந்து கழிவு நீா் வெளியேறுவதையும் தடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மாநகராட்சி ஊழியா்கள் வாகனம் மூலம் கழிவு நீரை அகற்றி சாலையில் கழிவுநீா் ஓடுவதை நிறுத்தினா்.

மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!

கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48... மேலும் பார்க்க

மேடை அமைக்க அனுமதி மறுப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை கண்டித்து, விர... மேலும் பார்க்க

ஓடைநீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவா்கள் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அம... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விவ... மேலும் பார்க்க

உறவினா் போல நடித்து நகை திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினா்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டமுத்துப்... மேலும் பார்க்க

திமுக நீட் வாக்குறுதி: அதிமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசின் நீட் தோ்வு வாக்குறுதியை கண்டித்து, அதிமுக மாணவரணி சாா்பில், கடலூா் ஜவான் பவன் அருகே மனித சங்கிலி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுத... மேலும் பார்க்க