செய்திகள் :

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தவருமான எல்.இளையபெருமாளை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு நூற்றாண்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், சிதம்பரம் புறவழிச்சாலையில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் எல்.இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் அமைக்கப்பட்ட நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, எல்.இளையபெருமாள் திருவுருவச் சிலையையும், நூற்றாண்டு அரங்கத்தையும் திறந்து வைத்துப் பேசியது:

இளையபெருமாள் பள்ளியில் பயிலும்போதே தீண்டாமை அடையாளமாக இருந்த இரட்டை பானை முறையை எதிர்த்துப் போராடியவர். அவருடைய நூற்றாண்டு அரங்கம் திறப்பு நாளில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் பொதுமக்களுடைய குறைகளை விரைந்து தீர்க்க மாபெரும் முன்னெடுப்பாக "உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கிவைத்துவிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற முன்னெடுப்பு மூலமாக பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று 100 நாள்களில் தீர்வு காண்பேன் என்று உறுதியளித்திருந்தேன். சொன்னதுபோல முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் "உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற தனித் துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

இதனால், திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து மக்கள் இன்னும் பல கோரிக்கை மனுக்களை வழங்கத் தொடங்கினார்கள். இதற்காக முதல்வரின் முகவரி என்ற தனித் துறையை உருவாக்கினோம். அடுத்து, மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5,000 முகாம்கள் நடத்தி, பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.

இப்போது, அதன் அடுத்தகட்டமாக "உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை தொடங்கி இருக்கிறோம். மொத்தம் பத்தாயிரம் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மகளிர் உரிமைத் தொகை:

தகுதி இருந்தும் மகளிர் உதவித்தொகை பெறாதவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பங்களைக் கொடுத்தால், நிச்சயமாக ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் வரிசையில் "உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் வீடு தேடி மனுக்களைப் பெறுவார்கள்.

தமிழக வரலாற்றில் திராவிட மாடல் அரசுதான் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகமான திட்டங்களைத் தந்திருக்கிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் மட்டும் போதாது. சுயமரியாதை சமூகத்தில் ஆவணங்களிலிருந்து ஜாதிய அடையாளங்கள் தொடர்ந்து நீக்கப்படும். ஜாதி அடையாளத்தோடு இருந்த கல்லூரி விடுதிகளை சமூக நீதி விடுதிகள் என மாற்றி இருக்கிறோம்.

சமூக விடுதலைக்காகப் பயணிப்பது என்பது நீண்ட நெடிய பயணம். அதற்கு காலம் பிடிக்கும்; எல்லாம் மாறும்; நிச்சயம் மாற்றுவேன். அதற்காக திராவிட மாடல் சமூக விடுதலை தனது பங்களிப்பை உறுதியாக செலுத்தும். அதற்கு இளையபெருமாள் போன்ற தலைவர்களின் வாழ்வும், அவருடைய படையும், அமைப்பும் வழிகாட்டட்டும்.

எதிரணியின் திட்டம் பலிக்காது: இந்த மேடையில் பெரியாரிய வழியில் வந்த திராவிட இயக்கத் தலைவர்கள், மார்க்சிய சிந்தனை கொண்ட தலைவர்கள், காந்திய வழியில் வந்த தேசிய இயக்கத் தலைவர்கள், அம்பேத்கர் இயக்கத் தலைவர்கள் என அனைவரும் ஓரணியில் இருக்கிறோம்.

இதுதான் "ஓரணியில் தமிழ்நாடு'. தமிழ்நாடு இப்படி ஓரணியில் இருக்கும்போது, தில்லி அணியின் எந்த காவித் திட்டமும் இங்கே பலிக்காது என்றார் முதல்வர்.

விழாவில் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!

திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்பட்டுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேல... மேலும் பார்க்க

காமராஜர் மீது காங்கிரஸுக்கும் தீராக் காழ்ப்பு! திருச்சி சிவா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முன்னாள் முதல்வர் காமராஜருக்காக அனைத்து அரசு பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியை கருணாநிதி கொண்டு வந்ததாகவும், நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டுமென்றும் காமராஜர் கோரியதாக திம... மேலும் பார்க்க

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் ,... மேலும் பார்க்க

மோடிக்கு கறுப்பு பலூன் காட்டிய ஸ்டாலின் வெள்ளைக் குடை பிடிக்கிறார்! இபிஎஸ் விமர்சனம்

பாஜகவிடம் அதிமுகவுக்கு பயம் என்று அதிமுகவை முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி பிரச... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 17) தமிழகத்தில் ஓரிரு இ... மேலும் பார்க்க