செய்திகள் :

எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து விலகிய கனிகா.... காரணம் என்ன?

post image

எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து ஈஸ்வரி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா, விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் பார்வதி, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்தப் பாகத்திலும் தொடர்கின்றனர். முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வருகிறது.

கதையின் படி, ஆதி குணசேகரனின் - ஈஸ்வரியின் மகனான தர்ஷனுக்கு, அன்புக்கரசி என்ற பெண்ணுடன் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாட்டை ஆதி குணசேகரன் செய்கிறார்.

இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாத தர்ஷன், தான் காதலிக்கும் பார்கவியைதான் திருமணம் செய்வேன் என்று கூறி வருகிறார். இந்தச் சூழலில் ஆதி குணசேகரனால் தாக்கப்படும் ஈஸ்வரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இப்படியாக கதைக்களம் சென்று கொண்டிருக்கும் நிலையில், எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து, நடிகை விலகியிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

ஈஸ்வரியின் பாத்திரம் முடிக்கப்படவுள்ளதால் கனிகா விலகினாரா? அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினாரா? என்பதற்கான விடை சில நாள்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நடிகை கனிகா எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. அவர் துபாய் சென்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியுள்ளதாக வெளியான தகவல், இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜர்!

It has been reported that actress Kanika, who played the role of Easwari from the series Itari Neechal - 2, has left the show.

கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய தொடர்கள்! இந்த வார டிஆர்பி பட்டியல்!

முன்னணி தொடர்களாக உள்ள கயல், எதிர்நீச்சல் -2 ஆகிய இரு தொடர்களை பின்னுக்குத்தள்ளி சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு ஆகிய தொடர்கள் முதலிடம் பிடித்துள்ளன. சின்ன திரைக்கான டிஆர்பி பட்டியலில், கயல் தொடரும் எ... மேலும் பார்க்க

தனுஷுடன் காதலா? மிருணாள் தாக்கூர் பதில்!

நடிகர் தனுஷுடான காதல் வதந்தி குறித்து மிருணாள் தாக்கூர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்தடுத்து அதிக திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இட்லி கடை, தேரே இஸ்க் ... மேலும் பார்க்க

திரைப்படம் போல ஒளிபரப்பாகும் சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரு தொடர்கள் திரைப்படம் போன்று இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகின்றன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஆக. 10) அண்ணா தொடர் இரண்டு மணிநேரம் தொடர்ந்து ஒளிபரப்பானது. இதேபோன்று... மேலும் பார்க்க

கூலியால் வார் - 2 படத்துக்கு சிக்கல்?

கூலி திரைப்படத்தால் வார் - 2 திரைப்படம் சிக்கலைச் சந்தித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாரான கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ப... மேலும் பார்க்க

மாறுபட்ட கதையில் ஆல்யா மானசா: பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ!

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.ராஜா ராணி தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ஆல்யா மானசா. இவர் நடிகை மட்டுமல்ல, நடனக் க... மேலும் பார்க்க

அதிரடி... ஆக்சன்... மதராஸி மேக்கிங் விடியோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிட்டுள்ளனர்.... மேலும் பார்க்க