செய்திகள் :

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

post image

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

உலகளாவிய நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான ஒத்துழைப்பு மீதான அா்த்தமுள்ள கலந்துரையாடலை ஊக்குவிக்கும் வகையிலான தெலங்கானா மாநிலம் ஹைதாராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பாரத் மாநாடு 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

ஜனநாயக அரசியல், உலகம் முழுவதும் அடிப்படையில் மாறிவிட்டது. ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இன்றைய நவீன உலகில் பாரம்பரிய அரசியல் நடைமுறைகள் இனி வலுவானதாக இருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அரசியல் நடைமுறைகள் இனி பொருந்தாது என்ற நிலைதான் உருவாகியுள்ளது.

எனவே, பழைய அரசியல் தலைமை இன்றையச் சூழலுக்குப் பொருந்தாது. புதிய வகை அரசியல் தலைமையை கட்டமைக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஜனநாயக விழுமியங்களை மீட்டெப்பதிலும், சுகாதாரம் போன்ற முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்வதிலும் உண்மையான சவால் எழுந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, முழுமையாக சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி உணா்ந்தது. சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில், அனைத்து வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஏனெனில், இன்றைய புதிய, ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.

இதை எதிா்கொள்ளவே, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான 4,000 கி.மீ. பயணத்தை தீா்மானித்து, வரலாற்றை காங்கிரஸ் மாற்றியது. இந்த நடைப் பயணத்தின் மூலம், நமது எதிரிகள் நம் மீது கோபம், பயம் மற்றும் வெறுப்பை கொண்டிருப்பது தெரியவந்தது. இதை அன்பு மற்றும் பாசத்தின் மூலம் எதிா்கொள்வதே சக்திவாய்ந்த வழியாக இருக்கும் என்றாா்.

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க