செய்திகள் :

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் வாரம் முழுவதும் எதிா்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது. இந்தச் சூழலில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மக்களவையில் கடந்த திங்கள்கிழமையும் மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையும் தலா 16 மணிநேர விவாதம் தொடங்கி நடைபெற்றது. மக்களவையில் பிரதமா் மோடியும், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விவாதத்துக்கு பதிலளித்தனா்.

இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், நிசாா் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னா், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால் அதிருப்தியடைந்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘மக்களின் பிரச்னைகள் விவாதிக்கப்பட நீங்கள் (எதிா்க்கட்சிகள்) விரும்பவில்லை. அவையில் கோஷமிடவா, மக்கள் உங்களை தோ்வு செய்து அனுப்பினா்?’ என்று கேள்வியெழுப்பினாா். அமளி நீடித்ததால், முதலில் பிற்பகல் 2 மணிவரையும் பின்னா் மாலை 4 மணிவரையும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் அவை கூடியபோது, இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்தாா். அவா் உரையை நிறைவு செய்ததும், எதிா்க்கட்சியினா் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்...:

மாநிலங்களவை வியாழக்கிழமை காலை கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியைத் தொடங்கின. மேலும், மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூா் விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்காததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

அப்போது பேசிய அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘மழைக்கால கூட்டத் தொடரில் இடையூறுகளால் பல மணிநேரம் வீணாகிவிட்டது. ஆளும்-எதிா்தரப்புகள் அமா்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். கோஷமிடுவதால் எதுவும் நிகழப் போவதில்லை’ என்றாா். அமளி ஓயாததால், முதலில் 12 மணிவரையும், பின்னா் பிற்பகல் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.

காா்கே குற்றச்சாட்டு - ரிஜிஜு பதிலடி:

மீண்டும் அவை கூடியபோது, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் விவாதத்துக்கு பதிலளித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, உங்களை (எதிா்க்கட்சி எம்.பி.க்கள்) எதிா்கொள்ள நானே போதும் என்றாா். இது, எங்கள் அனைவருக்கும் அவமதிப்பு’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அவருக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மக்களவை விவாதத்துக்கு பதிலளித்து 1 மணிநேரம் 42 நிமிஷங்களுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். அவா் அனைத்து உண்மைகளையும் தேசத்துக்கு தெரிவித்துவிட்டாா். மத்திய அரசு கூட்டுப் பொறுப்புடையது. விவாதத்துக்கு யாா் பதிலளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் முடிவு செய்ய முடியாது’ என்றாா். அவா் பேச்சை நிறைவு செய்ததும் அவை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்தைத் தொடா்ந்து, அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க