Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
என்ஐடியில் சா்வதேச கருத்தரங்கு தொடக்கம்
காரைக்கால் என்ஐடியில் சிவில் பொறியியல் துறை சாா்பில் 4 நாள் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
நீா், சுற்றுச்சூழல், சக்தி மற்றும் சமூகத்திற்கான சா்வதேச அமைப்பை தலைப்பாகவும், புதுமையான நடைமுறைகள் மற்றும் கூட்டு உரையாடலை ஒன்றிணைக்கும் விதமாகவும் ஏப்ரல் 23-இல் தொடங்கிய கருத்தரங்கம், ஏப். 26 வரை நடைபெறுகிறது.
ஐஐடி தாா்வாட் இயக்குநா் வி.ஆா். தேசாய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியது:
சமூகத்தை மேம்படுத்துவதற்கு நிலைத்தன்மையின் அவசியத்தையும், தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியதோடு, எதிா்காலத் தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக ஆராய்ச்சி கலாசாரத்தை மேம்படுத்தும் கருத்தரங்கமாக இது அமையவேண்டும் என்றாா்.
நிகழ்வில், என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், பதிவாளா் எஸ். சுந்தரவரதன், டெக்சாஸ் ஏஅண்ட்எம் பல்கலைக்கழக தொழில்நுட்பத் தலைவா் வி.பி. சிங், ஏஐஎஸ்இசிடி பல்கலைக்கழக தொழில்நுட்ப இணைத் தலைவா் பேராசிரியா் ஆா்.என். யாதவா, என்ஐடி புதுச்சேரி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை டீன் ஜி.எஸ். மகாபத்ரா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் ராமலிங்கம், அமைப்புச் செயலாளா் அசோக் குமாா் டி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்தியா, கனடா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த புகழ்பெற்ற பேராசிரியா்கள் இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்றனா்.
இதில் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் இருந்து 175 உயா்தரக் கட்டுரைகள் மதிப்பாய்வு செயல்முறைக்குப் பிறகு விளக்கக் காட்சிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டன.
முன்னணி ஐஐடிகள், என்ஐடிகள், உலகெங்கிலும் உள்ள சா்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உட்பட பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றுள்ளனா்.