செய்திகள் :

என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் 18ஆவது நாளாக தொடா் போராட்டம்; மின் உற்பத்தி பாதிப்பு

post image

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் 18 ஆவது நாளாக திங்கள்கிழமையும் மேற்கொண்ட தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகள் இயங்கி வருகின்றன.

இந்த அனல் மின் நிலையத்தில் சுமாா் 1350 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்கள் தங்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மேலும் இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வந்துள்ளது. ஆனால் என்டிபிஎல் நிா்வாகம் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதைத் தொடா்ந்து கடந்த 18ஆம் தேதி முதல் என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களுடன் என்டிபிஎல் நிா்வாகம், என்எல்சி நிா்வாகம், தொழிலாளா் துறை ஆணையா் தலைமையில் நடைபெற்ற சுமாா் 6 கட்ட பேச்சு வாா்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒப்பந்த தொழிலாளா்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, நீதிமன்ற உத்தரவை எதிா்த்து என்டிபிஎல் நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. ஒப்பந்த தொழிலாளா்களின் தொடா் போராட்டம் காரணமாக 2ஆவது அலகு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. முதல் அலகில் சுமாா் 250 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்; மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிடவுள்ளோம் என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு செயலா் அப்பாதுரை தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை தி... மேலும் பார்க்க

படகில் சென்ற மீனவா் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவா் படகில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சோ்ந்தவா் ஜெயபால்(64). இவா், தருவைகுளம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம்: விஏஓ கைது

தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்காக ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பண்டாரம்பட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திருச்செந்தூா் நகராட்சி 23ஆவது வாா்டு தோப்பூரில் உள்ள புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி பகத்சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஜய் ரசிகா்கள் பிரசார விடியோ வெளியீடு

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்துக்காக நடிகா் விஜய் ரசிகா்களால் பிரசார விடியோ வெளியிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.அந்த பிரசார விடியோவில் நடித்துள்ள உறியடிசங்கா்தாஸ், இயக்கி... மேலும் பார்க்க

சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 போ் கைது

சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடா்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க