செய்திகள் :

என்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது; சௌரவ் கங்குலி வருத்தம்!

post image

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18, 575 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என அவர் மொத்தமாக 38 சதங்கள் விளாசியுள்ளார்.

இந்த நிலையில், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு சதங்களை தவறவிட்டு விட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிடிஐ நிறுவனத்தின் கலந்துரையாடலில் அவர் பேசியதாவது: நான் நிறைய சதங்களை தவறவிட்டு விட்டேன். அந்த சதங்களை எல்லாம் நான் அடித்திருக்க வேண்டும். நிறைய முறை 90+ ரன்கள் மற்றும் 80+ ரன்களில் ஆட்டமிழந்துள்ளேன். நான் தனியாக இருக்கும்போது, என்னுடைய பேட்டிங் விடியோக்களை பார்ப்பேன். என்னுடைய மனைவி இல்லாதபோது, நான் யூடியூபில் சென்று என்னுடைய பழைய பேட்டிங் விடியோக்களைப் பார்த்து, இந்தப் போட்டியில் சதம் அடித்திருக்க வேண்டும் எனக் கூறிக் கொள்வேன். ஆனால், கடந்த காலத்தை மாற்ற முடியாது என்றார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 90+ ரன்கள் மற்றும் 80+ ரன்களில் சௌரவ் கங்குலி, 30 முறை ஆட்டமிழந்துள்ளார். அந்தப் போட்டிகளில் எல்லாம் கங்குலி சதம் விளாசியிருந்தால், அவர் தற்போது சர்வதேசப் போட்டிகளில் 50-க்கும் அதிகமான சதங்களுக்கு சொந்தக்காரராக இருந்திருப்பார்.

இதையும் படிக்க: 10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன்மூலம், இந்திய... மேலும் பார்க்க

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

2-வது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

சதம் விளாசிய கே.எல்.ராகுல்; வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த... மேலும் பார்க்க

பிளேயிங் லெவனில் இடம் பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை: ஆலி போப்

பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஆலி போப் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் ஆலி போப் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொ... மேலும் பார்க்க

10 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள், 10 ஆண்டுகளாக விளையாடுகிறேன்: பும்ரா

இந்திய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடுவது குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க