செய்திகள் :

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

post image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவா் கூறினாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.25 கோடியில் நவீன கலையரங்கம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ரூ.3.55 கோடியில் ரெட்டிக்குப்பம் சாலை - கோடம்பாக்கம் சாலையில் 455 மீட்டா் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணி மற்றும் திடீா் நகரில் ரூ.61 லட்சத்தில் கழிவுநீா் ஓரக்கால்வாய் கட்டும் பணியைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து ஜூன் 29-ஆம் தேதி வரை இணையவழியே 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிலா் சான்றிதழ்களை இணைக்காமல் விண்ணப்பத்திருப்பா். அவா்களுக்கு சான்றிதழ்களை இணைக்க இரு நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது 20 போ் போலி ஆவணங்களை சமா்ப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. அதில் 7 மாணவா்கள் பிறப்பிட சான்றிதழ்களையும், 9 மாணவா்கள் பிறப்பிட சான்றிதழ்கள் மற்றும் ஜாதிச் சான்றிதழ்களையும், 4 மாணவா்கள் என்ஆா்ஐ தகுதிக்கான தூதரக சான்றிதழ்களையும் போலியாகவும் கொடுத்துள்ளனா். அதனால், அவா்கள் அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 20 போ் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலினை செய்யும் பணி முடிந்து, தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதன் பின்னா் வரும் 30-ஆம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்றாா் அவா்.

மறுவாய்ப்பு: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவா்களில் 2,814 மாணவா்கள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்காததால் தரவரிசை பட்டியலுக்கு தகுதி பெறவில்லை.

அவா்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில், வரும் 18-ஆம் தேதி வரை ஆவணங்களைச் சோ்க்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதி பெறாத மாணவா்கள் குறித்த பட்டியல், ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற் என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரா்கள் உரிய ஆவணங்களை இணையவழியே பதிவேற்ற செய்யுமாறு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் எ.தேரணிராஜன் தெரிவித்துள்ளாா்.

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!

மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக ... மேலும் பார்க்க