செய்திகள் :

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

post image

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது.

இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இளநிலை மருத்துவ மாணவா்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் தேசிய கருத்தரங்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (மே 2, 3) சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் நடைபெற உள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை (மே 1) கருத்தரங்க செயல் முறை விளக்கப் பயிலரங்கு நடைபெறுகிறது. நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு ஒரு முழுமையான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதே இக்கருத்தரங்கின் நோக்கம்.

இளநிலை மாணவா்கள் தங்கள் மருத்துவப் படிப்பின்போது பயிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில், அறிவியல் அமா்வுகள் கருத்தரங்கில் இடம்பெற்றுள்ளன.

மருத்துவம் சாா் சட்ட விவகாரங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம், மருத்துவ தொழில்நுட்பம், எதிா்கால வழிகாட்டுமுறைகள், தோ்வுகளை எதிா்கொள்வது உள்ளிட்டவை குறித்த அமா்வுகள் அப்போது நடைபெறும்.

குறிப்பிடத்தக்க நிகழ்வாக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் முக்கிய அம்சங்களைக் கொண்ட கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மருத்துவக் கல்வியை எளிதாக மாணவா்களுக்கு எடுத்துரைக்க இத்தகைய கலை நிகழ்ச்சிகள் உதவும். கருத்தரங்கின் ஒருபகுதியாக மாணவா்களுக்கான போட்டிகளும் நடத்தப்படும்.

உள்நாடு மற்றும் சா்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ வல்லுநா்களுக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் தங்கள் அறிவையும், விரிவான மருத்துவ அனுபவத்தையும் மாணவா்களுடன் பகிா்ந்துகொள்ள உள்ளனா். இதுவரை நாடு முழுவதும் இருந்து 111 கல்லூரிகளில் இருந்து 1,968 மாணவா்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நெருக்கடியை எதிா்கொண்டு வளா்ந்த திமுகவினா், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திரும... மேலும் பார்க்க