செய்திகள் :

``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்

post image

இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் பெய்த கனமழையால், மாண்டி தொகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவரின் தொகுதிக்குச் சென்ற கங்கனா ரனாவத், அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,``பேரிடர் நிவாரணம் வழங்க எனக்கு எந்த அதிகாரப்பூர்வ அமைச்சரவையும் இல்லை. பஞ்சாயத்துகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏக்கள்) கூட நாடாளுமன்ற உறுப்பினர்களை (எம்.பி.க்கள்) விட பெரிய பட்ஜெட்டுகளைப் பெறுகிறார்கள்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

எம்.பி-களுக்குள் நாங்கள் பேசிக்கொள்ளும் போது நிறைய எம்.பி.க்கள் மிகவும் விரக்தியடைந்து உணர்கிறார்கள் எனத் தெரிந்தது. (எம்.எல்.ஏக்கள்) சில சலுகைகள் இருப்பது போல் கூட எங்களுக்கு இல்லை. எம்.பி-யாக என் பகுதிக்குச் செல்லும்போது நான் நிறைவேற்ற எந்தத் திட்டமும் இல்லை. அதற்கான சூழல்கூட இல்லை. நீங்கள் மத்திய அரசிடம் செல்லும்போது, நீங்கள் எப்போதும் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு வெளியே வரிசையில் காத்திருக்கிருக்க வேண்டும்.

ஒரு பஞ்சாயத்து அல்லது எம்.எல்.ஏ கூட ஒரு எம்.பி.யை விட அதிக பட்ஜெட்டைக் கொண்டிருப்பதாக பல எம்.பி.க்கள் புகார் கூறுகின்றனர். அவர்கள் எங்களை மதிப்பதுமில்லை. (ஒரு எம்.பி.யின்) பணிக்கு நிறைய தகவல் தொடர்பு தேவைப்படுகிறது. நமது இடம் மற்றும் வேலை என்ன? நாம் என்ன செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும்?’ என்ற விரக்தியின் காரணமாகவே மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) உருவாக்கப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் நிறைய வேலைகளில் மூழ்கியுள்ளனர். இதற்கிடையில்,(எம்.பி.க்கள்) நடுவில் இருந்து, தடுமாறுகிறோம்" என்றார்.

காஷ்மீர்: "கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை..." - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக... மேலும் பார்க்க

"இந்தி நமக்கு மூத்த தாய்; அப்துல் கலாம் பார்வையில்..." - தேசிய மொழியாக வரவேற்கும் பவன் கல்யாண்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.ஆனால், தெலுங்கு தேசம் கட்ச... மேலும் பார்க்க

பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் 11 நாள்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டித்துப் பேசுகையில் பீகார் நாட்டின் 'இந்தியாவின் குற்றத் தலைநகரம்' என விமர்சித்துள்ளார். ப... மேலும் பார்க்க

வேலூர்: பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டடப் பணிகள்; சிறிய அறையில் குழந்தைகள்- பெற்றோர் அச்சம்!

வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் அருகில் அமைந்துள்ள ஊசூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய க... மேலும் பார்க்க

'உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!'- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்

மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்... மேலும் பார்க்க