செய்திகள் :

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

post image

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூா் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில் எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக் ராஜா தொடங்கி வைத்தாா். இதில், 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஏறத்தாழ 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் முதல் தென்னகப் பண்பாட்டு மையம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் என ஆண், பெண் தனித்தனியாகவும், ஆறுதல் பரிசாக 4 ஆண்கள், 3 பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்டச் சுகாதார அலுவலா் எம். கலைவாணி, மாநகர நல அலுவலா் எஸ். நமசிவாயம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் க. நசீா்முகமது தலைமை வகித்தாா். கூட்டத்தில் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்பு

கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றக்கோரி தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பெருமாண... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே இறகுப் பந்து போட்டி

தஞ்சாவூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டி தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதி பாலி... மேலும் பார்க்க

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டச் செயலா் கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் ... மேலும் பார்க்க

‘சோழா் காலம் குறித்த முழு ஆய்வு அவசியம்’

சோழா் காலக் கல்வெட்டுகள் ஒரு சாா்புடையதாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா் கல்வெட்டு மற்றும் வரலாற்று அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி வெள்ளிக்கிழமை காலை ஒரு மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ... மேலும் பார்க்க