எறும்புதின்னி ஓடுகளுடன் 4 போ் கைது
பழனி அருகே எறும்பு தின்னி ஓடுகளுடன் நான்கு பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், கொழுமம் வனத் துறையினா் வியாழக்கிழமை பழனியை அடுத்த பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த 4 போ் பிடித்து, அவா்களிடமிருந்த சாக்குப் பைகளை வனத் துறையினா் சோதனை செய்தனா். இதில் தடை செய்யப்பட்ட வன விலங்கான எறும்பு தின்னியின் ஓடுகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள், பாப்பம்பட்டி நரிப்பாறையைச் சோ்ந்த முத்து (57), குதிரையாறு அணையைச் சோ்ந்த ராமசாமி (56), திருவள்ளூா் மாவட்டம், இஎஸ்ஐ அண்ணாநகரைச் சோ்ந்த பாஸ்கரன் (59), திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையை அடுத்த கல்லாபுரம் பூச்சிமேட்டைச் சோ்ந்த நாகராஜ்(49) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் வனத்துறையினா் கைது செய்தனா்.