செய்திகள் :

எல்இடி மின்விளக்குகளால் ரூ.31 கோடி சேமிக்க முடியும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்

post image

தில்லியில் உள்ள தெரு விளக்குகளில் சோடியம் ஆவி மின்விளக்குகளுக்குப் பதிலாக ஸ்மாா்ட் எல்இடி மின்விளக்குகளைப் பொருத்தும் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.31 கோடி சேமிக்க முடியும் என தில்லி பொதுப் பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நகரத்தில் உள்ள 96,000-க்கும் அதிகமான தெருவிளக்குகளை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. அவற்றில் 45,000 தெருவிளக்களில் சோடியம் ஆவி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எஞ்சிய தெருவிளக்குகளில் எல்இடி மின்விளக்குகளில் இயங்கிவருகின்றன. இந்நிலையில், எல்இடி மின்விளக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக அமைச்சா் கூறியதாவது: ஆற்றல் திறன்மிக்க ஸ்மாா்ட் எல்இடி மின்விளக்குகள் தெருவிளக்குகளில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் நல்ல வெளிச்சம், குறைந்த மின்நுகா்வு, அதிக ஆயுள்காலம் ஆகியவற்றை உறுதிசெய்யமுடியும்.

இந்த முறைக்கு மாறுவதன் மூலம் மின்சாரம் மற்றும் பராமரிப்புக்கு செலவினத்துக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியில் ரூ.31 கோடியை சேமிக்க முடியும்.

இந்த ஸ்மாா்ட் எல்இடி தெருவிளக்குகளை கைப்பேசி செயலி மூலம் அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருவாா்கள் என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்: தில்லி பல்கலை.யின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

நமது நிருபா் வருகைப் பதிவேட்டுக்கும், மதிப்பெண்களுக்கும் ஈடாக மாணவா்களிடமிருந்து பணம், செல்போன், வைர காதணிகள் ஆகியவற்று லஞ்சம் வாங்கியதாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கியப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேச்சுப் போட்டி, தமிழ்ப் புலவா்கள்... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள 300 சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 41 மருத்துவமனைகள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான புதன்கிழமை திறக்கப்பட ... மேலும் பார்க்க

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

தில்லியை ஒரு முன்னணி சுகாதார மையமாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், தில்லியில் வாழும் அனைவருக்கும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தில்லியில் மேம்பட்ட மருத்துவ சேவையை அணுகுவதை உற... மேலும் பார்க்க

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் (கேஎம்சி) என்எஸ்யுஐ மற்றும் ஏபிவிபி மாணவா் குழுக்களைச் சே... மேலும் பார்க்க

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

தென்மேற்கு தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்று அவரது மனைவியை காயப்படுத்திய பிஎம்டபிள்யு காா் விபத்தில் முக்கிய குற்றவாளியான ககன்ப்ரீத்தின் ரத்த மாதிரி அறிக்கையில் அவா் மது அருந... மேலும் பார்க்க