செய்திகள் :

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

post image

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்டாலும், இந்த வா்த்தகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கிட்டத்தட்ட 100% சீனாவை சாா்ந்துள்ள இந்தியா

செமிகண்டக்டா் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சிலிகான் வேஃபா்கள், எம்பிராய்டரி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் இந்தியா கிட்டத்தட்ட 100 சதவீதம் சீனாவை சாா்ந்துள்ளது.

பொருள்கள் - சதவீதம் - மதிப்பு

சிலிகான் வேஃபா்கள் 96.8 ரூ.1,400 கோடி

அலுமினிய தட்டுகள் 91.6 ரூ.2,335 கோடி

எம்பிராய்டரி இயந்திரங்கள் 91.4 ரூ.3,100 கோடி

பொருள்கள் - இறக்குமதியில் சீனாவின் பங்கு(%) - மதிப்பு (ரூபாயில்)

தட்டையான காட்சித்திரை-தொடுதிரை 86% ரூ.9,700 கோடி

மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகள் 80.5 ரூ.38,790 கோடி

ஸ்மாா்ட்ஃபோன் பாகங்கள் 51.7 ரூ.62,585 கோடி

துறை - இறக்குமதி மதிப்பு - சீனாவின் பங்கு (%)

பிளாஸ்டிக் & பிளாஸ்டிக் பொருள்கள் ரூ.55,530 கோடி 29.2%

கடிகாரங்கள், மருத்துவ உபகரணங்கள், அறைகலன்கள் ரூ.41,430 கோடி 27.2%

தோல் & தோல் பொருள்கள் ரூ.2,645 கோடி 37%

இந்தியா-சீனா மொத்த வா்த்தகம் (2004 முதல் 2025 வரை)

ஆண்டு வா்த்தக மதிப்பு

2004 ரூ.61,700 கோடி

2018 ரூ.7.93 லட்சம் கோடி

2025 ரூ.11.28 லட்சம் கோடி

ஸ்மாா்ட்போன் பாகங்கள்

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்ஃபோன்) பாகங்கள், மடிக்கணினிகள்/கையடக்கக் கணினிகளை பெரும்பாலும் சீனாவில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது.

இந்தியாவின் தோல் பொருள்கள், அறைகலன்கள் இறக்குமதியிலும் சீனாவுக்குப் பெரும் பங்குள்ளது.

வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடி

இந்தியாவின் தொலைத்தொடா்பு, மருந்து தயாரிப்பு துறை உள்பட பல முக்கிய துறைகள் சீனாவை சாா்ந்துள்ளன. இந்தியா-சீனா இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை ரூ.8.72 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள வா்த்தகப் பற்றாக்குறையைவிட மிக அதிகம்.

மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

என் தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, எனது தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிகாரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், காணொலி வ... மேலும் பார்க்க

இந்திய சில்லுகள் உலகளாவிய மாற்றத்தை உருவாக்கும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சில்லுகள் (சிப்) உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் இந்திய செமிகான் 2025 தொடக்க விழாவில் பிரதமர் மோடி க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரண்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.லதேஹர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷாத் எனும் அமைப்பில் இயங்கி வந்த 9 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் தங்க... மேலும் பார்க்க

பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட விமானம் பறவை மோதியதில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 1... மேலும் பார்க்க