செய்திகள் :

எல்லை விவகாரங்களில் ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்

post image

எல்லை சார்ந்த விஷயங்களில் ராணுவ தலைமைத் தளபதியின் அறிக்கையை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுவது வருத்தம் அளிப்பதாவும் விமர்சித்துள்ளார்.

இந்தியா - சீனா எல்லை நிலவரத்தில் ராணுவ தளபதி வெளியிட்ட அறிக்கை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப். 3) கூறியுள்ளார்.

ராணுவ தளபதியின் கருத்துகள் இருபுறமும் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய ரோந்துப் பணிகள் குறித்து மட்டுமே கூறப்பட்டிருந்தது. அண்மைக் காலமாக நீக்கப்பட்டிருந்த இந்த பாரம்பரிய நடைமுறை மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்கள் நாடாளுமன்றத்திலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

ராணுவ தலைமைத் தளபதி எங்கும் ராகுல் காந்தியை எங்கும் குறிப்பிட்டுப் பேசவில்லை. தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

சீனா நுழைந்த இந்தியப் பகுதி ஏதேனும் இருந்தால், அது 1962 மோதலின் விளைவாக அக்சாய் சின்னில் 38,000 சதுர கி.மீ. மற்றும் 1963 -ல் பாகிஸ்தான் சீனாவிற்கு சட்டவிரோதமாக விட்டுக்கொடுத்த 5,180 சதுர கி.மீ. ஆகும். நம் வரலாற்றின் இப்பகுதியை ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க