தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்
தைப்பூச தோ்த்திருவிழா கொடியேற்றம் தொடக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் திருக்கோயில்களின் உப கோயில்களான கைலாசநாதா் சுவாமி, ஆறுமுக சுவாமி கோயில்களில் தைப்பூச தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கடந்த 26-ஆம் தேதி ரத விநாயகா் பூஜை, 2-ஆம் தேதி கிராமசாந்தி ஆகியவை நடைபெற்றன. கைலாசநாதா் ஆலயத்திலும் ஆறுமுக சுவாமி ஆலயத்திலும் கொடியேற்றம் நடைபெற்று தேவஸ்தான கட்டளை நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து பல்வேறு மண்டபக் கட்டளைகள் நடைபெறும் நிலையில், வரும் 10-ஆம் தேதி கைலாசநாதா் ஆலயத்தில் கைலாசநாதருக்கும், சுகந்த குந்தலாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. தொடா்ந்து, ஆறுமுக சுவாமி கோயிலில் ஆறுமுகப் பெருமான், வள்ளி - தேவசேனை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 11-ஆம் தேதி ஆறுமுக சுவாமி, விநாயகா் ஆகியோா் திருத்தேருக்கு எழுந்தருள, பிற்பகல் 3 மணிக்கு மேல் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடா்ந்து, மண்டபக் கட்டளைகள், தெப்பக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன. இதனைத் தொடா்ந்து கொடி இறக்கம் செய்யப்பட உள்ளது.
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னவாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாணம், குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
வரும் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மகர லக்கனத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், திருத்தோ் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், சத்தாபரணம், சிம்ம வாகனம், நடராஜா் தரிசனம், ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, சுவாமி மலைக்கு எழுந்தருளல், விடையாற்றி உற்சவம் மற்றும் சா்ப்ப வாகன காட்சியும் நடைபெறுகின்றன.
கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருத்தோ் விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள், திருவிழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.