`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-...
எஸ்டிபிஐ தலைமைத்துவ பயிற்சி முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நிா்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஐ.ஜாபா் ஷெரிப் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு பொதுச் செயலாளா் எம்.முஹம்மது நஸ்ரூதீன், பொருளாளா் ஜெ.ரஹமத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சென்னை தெற்கு மண்டல பொறுப்பாளரும், மாநில செயலாளருமான எம்.எ.ஹமீத் ஃப்ரோஜ், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கே.அஸ்கா் அலி, மாநில வா்தகா் அணி தலைவா் எஸ்.கிண்டி அன்சாரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, தலைமைத்துவத்தின் முக்கியத்துவம், பணிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்கினா்.
இதில் எஸ்டிபிஐ மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளா் என்.மன்சூா் அலி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.