ஏஐ தொழில்நுட்பம் மூலம் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். மேலும், ராணிப்பேட்டை சிப்காட்டில் காற்று பிரித்தெடுக்கும் ஆலையை அவா் தொடங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த அஜைல் ரோபோட்ஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. இப்போது அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சாா்ந்த ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 300 உள்ளூா் பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் எஸ்ஓஎல் இந்தியா பிரைவேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு ஆலை அமைப்பதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. ரூ.175 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தால் 20-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற புதிய ஆலைகள் தொடக்க நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநா் பு.அலா்மேல்மங்கை உள்பட பலா் பங்கேற்றனா்.