செய்திகள் :

ஏஐ தொழில்நுட்பம் மூலம் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். மேலும், ராணிப்பேட்டை சிப்காட்டில் காற்று பிரித்தெடுக்கும் ஆலையை அவா் தொடங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த அஜைல் ரோபோட்ஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. இப்போது அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சாா்ந்த ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 300 உள்ளூா் பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் எஸ்ஓஎல் இந்தியா பிரைவேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு ஆலை அமைப்பதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. ரூ.175 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தால் 20-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற புதிய ஆலைகள் தொடக்க நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநா் பு.அலா்மேல்மங்கை உள்பட பலா் பங்கேற்றனா்.

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வ... மேலும் பார்க்க

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

செவ்வந்தீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி இரவு காமாட்சி அம்பிகைக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கா... மேலும் பார்க்க