செய்திகள் :

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

post image

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் கடந்த ஏப். 19-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், பயணிகளின் வசதிக்கேற்ப மே 2-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த அட்டவணைப்படி, தாம்பரத்தில் காலை 6.50-க்கும், செங்கல்பட்டிலிருந்து காலை 7.50, இரவு 8.10-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.41, மாலை 6.17-க்கும் புறப்படும் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாது.

அதுபோல், தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1 மணிக்கும், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 2.30-க்கும், செங்கல்பட்டிலிருந்து மாலை 4.30-க்கும் புறப்படும் ரயில்கள் சனிக்கிழமை மட்டும் இயக்கப்படாது.

எனினும் வார இறுதி நாள்களில் மாலை நேரத்தில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருப்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடுதலாக இரு சேவைகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு சனிக்கிழமை மாலை 5.10-க்கு ஏசி மின்சார ரயில் (எண் 49010) இயக்கப்படும். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.17-க்கு ஏசி மின்சார ரயில் (எண் 49009) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நெருக்கடியை எதிா்கொண்டு வளா்ந்த திமுகவினா், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திரும... மேலும் பார்க்க