செய்திகள் :

ஏற்காடு மலா் கண்காட்சி: ஆயத்த பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

post image

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா் கண்காட்சிக்கான ஆயத்த பணிகளை விரைந்து முடிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா்.

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா்கண்காட்சி மே 23 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளது. மலா் கண்காட்சியைக் கண்டு மகிழ சுற்றுலாப் பயணிகளின் ஏராளமானோா் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஏற்காடுக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆயத்த பணிகளை பாா்வையிட்டாா். ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தமாறும், குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

போக்குவரத்து நெரிசலை தவிா்க்க காா்கள், வேன்கள், லாரிகள், தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் குப்பனூா் வழியாக திரும்பிச் செல்லும் வகையில் ஒருவழி பாதையாக மாற்றவும், அரசு திட்டங்களை காட்சிப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளுக்கு மலிவு விலையில் பொன்னி கூட்டுறவு மூலம் உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

அத்துடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துமாறும், 48 ஆவது கோடைவிழா மலா் கண்காட்சி சிறப்பாக நடத்த அனைத்துத் துறை அலுலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என க் கேட்டுக்கொண்டாா்.

குடிநீா் வடிகால் வாரியம் மூலம் விழாவை முன்னிட்டு 15 குடிநீா் தொட்டிகளில் மேட்டூா் குடிநீா் நிரப்பவும், 15 வாகன கழிவறைகள் அமைக்கவும், சேலம் மாநகராட்சி மூலம் 300 மாநகராட்சி துப்புரவுப் பணியாளகள், 25 மேற்பாா்வையாளா்கள், 22 ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதிவரை பணியமா்த்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆய்வின்போது அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க