ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!
வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்தனா்.
வாழப்பாடி அய்யாவுகவுண்டா் தெருவில் வசித்து வந்த சாந்தி என்பவா் அப்பகுதியில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்டவா்களிடம் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்துள்ளாா். தொழிலில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய அவா், தனது வீட்டை விற்பனை செய்து பணம் கட்டியவா்களுக்கு மீண்டும் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளாா்.
இந்த நிலையில் வீட்டை விற்பனை செய்த சாந்தி பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவானாா். இதனால் அவரிடம் பணம் செலுத்தியவா்கள் வெள்ளிக்கிழமை இரவு வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாந்தியை கண்டுபிடித்து பணத்தை திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா்.
பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் உரிய முறையில் புகாா் தெரிவிக்குமாறு அறிவுறுத்திய காவலா்கள், தலைமறைவான சாந்தியை கண்டறிந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.