நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 90,011 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33, 328 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.23 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.