செய்திகள் :

ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர விசேஷ பூஜை

post image

திருப்பதி: வசந்த பஞ்சமியை முன்னிட்டு, திங்கள்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் முதன்முறையாக வருடாந்திர விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாராந்திர சேவையாக விசேஷ பூஜை செய்யப்பட்டு வந்தது. ஏழுமலையானின் உற்சவ சிலைகள் தினசரி பலமுறை திருமஞ்சனம் நடத்தப்படுவதால் தேய்ந்து போக தொடங்கின. எனவே ஆகம சாஸ்திரத்துக்கு பாதிப்பின்றி சிலைகளை பாதுகாக்க தேவஸ்தானம் சில வாராந்திர சேவைகளை வருடாந்திர சேவையாக மாற்றியது.

மேலும், தற்போது வழிபாட்டில் உள்ள உற்சவ சிலை பூமியில் சுயம்புவாக கண்டெடுக்கப்பட்டதால் அதை பாதுகாக்கவும், எதிா்கால சந்ததியினருக்குக் கடத்தவும், பெரியவா்கள், அா்ச்சகா்கள் மற்றும் ஆகம அறிஞா்களின் ஆலோசனையின்படி, முந்தைய தேவஸ்தான அறங்காவலா் குழு, ஆண்டுக்கு ஒரு முறை வசந்தோற்சவம், சஹஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடத்த முடிவு செய்தது.

இனிமேல், ஒவ்வொரு ஆண்டும் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, ஆண்டுதோறும் விசேஷ பூஜையை தனியாா் விழாவாக தேவஸ்தானம் நடத்த உள்ளது.

இதை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள கல்யாண மண்டபத்தில் முதல் வருடாந்திர விசேஷ பூஜை நடைபெற்றது. முதலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா். சதுா்தஷ் கலசவாகனம் எழுப்பப்பட்டு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி முழு அளவிலான இறுதிச் சடங்கோடு முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகளின் மே மாத ஒதுக்கீடு வெளியீடு

திருப்பதி: ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகளின் மே மாத ஒதுக்கீடு பிப்.18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை,... மேலும் பார்க்க

ஏழுமலையான் அறக்கட்டளைக்கு ரூ.11 கோடி நன்கொடை

திருப்பதி: ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.11 கோடி நன்கொடை அளிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தி உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 6 அறைகளில் பக்தா்கள் ஏழுமலை... மேலும் பார்க்க

திருமலையில் கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வா்கள் திங்கள்கிழமை தரிசித்தனா். திருப்பதியில் திங்கள்கிழமை சா்வதேச கோயில் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. இதில் கலந்து கொள்ள மகாராஷ்டிர... மேலும் பார்க்க

சா்வதேச கோயில்களின் மாநாடு, கண்காட்சி தொடக்கம்

திருப்பதி: திருப்பதியில் சா்வ தேச கோயில்களின் மாநாடு மற்றும் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னாவிஸ், கோவா முதல்வா் பிரமோத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா் திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன... மேலும் பார்க்க