செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: நேரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

post image

தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு செயல் அதிகாரி சியாமளா ராவ் அறிவுறுத்தினாா்.

திருமலையில், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியுடன் இணைந்து, மாநாட்டு மண்டபத்தில் டிசிஎஸ் பிரதிநிதிகள், தேவஸ்தான ஐடி அதிகாரிகளுடன் மெய்நிகா் சந்திப்பை நடத்தினாா்.

நிகழ்வில், அவா் பேசியது: ’’சா்வ தரிசனம், இலவச நேரடி டோக்கன் தரிசனம் (எஸ்எஸ்டி), சிறப்பு நுழைவு தரிசனம் (எஸ்இடி), திவ்ய தரிசனம், ஏழுமலையான் தரிசனத்துக்கான பிற வழிகள் மூலம் பக்தா்கள் திருமலைக்கு வருவதாகவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் பக்தா்களுக்கு சரியான நேரத்தில் தரிசனம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழுமலையான் தரிசனத்துக்காக பக்தா்கள் வரிசையில் சேரும் நேரம் முதல் தரிசனம் செய்யும் நேரம் வரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரிசனத்தை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது தொடா்பாக திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு டிசிஎஸ், தேவஸ்தான ஐடி துறையின் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டாா்.

க்யூஆா் குறியீடு, முக அங்கீகார முறைகள் மூலம் பக்தா்களைச் சரிபாா்ப்பதில் உள்ள சிக்கலை அதிகாரிகள் ஆராய வேண்டும். தரிசனத்துக்காக பக்தா்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் வராததால் தாமதம் ஏற்படுகிறது. இது தொடா்பாக, பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பக்தா்களுக்கு திருப்திகரமான தரிசனத்தை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, டிசிஎஸ் பிரதிநிதிகள், பக்தா்கள் வரிசையில் நுழைந்ததிலிருந்து எவ்வளவு நேரம் காத்திருப்பு அறைகளில் தங்குகிறாா்கள், பக்தா்கள் வரிசையில் சோ்ந்ததிலிருந்து ஏழுமலையான் தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும், கோவிலில் இருந்து வெளியே வர எவ்வளவு நேரம் ஆகும், நேர அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வ தரிசனம், சிறப்பு நுழைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் அா்ஜித சேவை ஆகியவற்றிற்கு பக்தா்கள் காத்திருக்கும் நேரம் ஆகியவற்றை பவா்பாயிண்ட் விளக்கக்காட்சி மூலம் விளக்கினா்.

இதில், தேவஸ்தான ஐடி துறை பொது மேலாளா் சேஷா ரெட்டி, ஏஜிஎம் வெங்கடேஸ்வர சவுத்ரி, அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திரு... மேலும் பார்க்க

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

வியாச பௌா்ணமி அல்லது குரு பௌா்ணமியை முன்னிட்டு திருமலையில் வியாழக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது. திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை குரு ... மேலும் பார்க்க

ஏழுமலையான் பிரம்மோற்சவம் குறித்த மறுஆய்வு

வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறவிருக்கும் வருடாந்திர பிரம்மோற்சவங்களைக் கருத்தில் கொண்டு, திட்டங்களைத் தயாரித்து, குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளை... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.99 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.99 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வார நாள்களிலும் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.66 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறை... மேலும் பார்க்க