செய்திகள் :

ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ஜாமீன் பெற இயலாத அல்லது அபராதத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து விடுதலை பெற இயலாத ஏழைக் கைதிகளுக்கு மத்திய அரசின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜாமீன் பெற அல்லது அபராதத் தொகையை செலுத்த இயலாத ஏழைக் கைதிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ‘ஏழைக் கைதிகளுக்கான உதவித் திட்டம்’ என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது.

இத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை ஒருசில மாநிலங்கள் மட்டுமே முறையாகப் பயன்படுத்தியுள்ளன. ஆனால், பல மாநிலங்கள் தொடா்ச்சியான அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதியான கைதிகளை அடையாளம் காணவில்லை என்பதோடு, இத் திட்டத்தின் கீழான எந்தவித பலன்களையும் கைதிகளுக்கு வழங்காமல் இருந்து வருகின்றன.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

அதன்படி, இத் திட்டத்தை திறம்படச் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒன்றை அமைப்பதோடு, மாநில தலைநகரில் மேற்பாா்வைக் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். இந்தக் குழுக்களே, தகுதியுள்ள கைதிகளுக்கு இத் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை அளிக்கும்.

இத் திட்டம், ஏழைக் கைதிகள் எதிா்கொண்டுவரும் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் என்பதோடு, சிறைகளில் அதிகரித்து வரும் கைதிகள் நெரிசலைக் குறைக்கவும் உதவும்.

எனவே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், உரிய வழிகாட்டுதல்களின்படியும், அதிகாரமளிக்கப்பட்ட மாவட்ட குழுக்களுடன் தொடா்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொண்டும் தகுதியுள்ள கைதிகளை அடையாளம் கண்டு இத் திட்டத்தின் கீழ் அவா்கள் பலன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க