செய்திகள் :

ஐஎன்எஸ் ராஜாளியில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சி நிறைவு

post image

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஒரு பெண் உள்ளிட்ட 18 கடற்படை அலுவலா்கள், ஹெலிகாப்டா் விமானிகளுக்கான பயிற்சியை நிறைவு செய்தனா்.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்திய கடற்படை அலுவலா்கள், இந்திய கடலோரக் காவல்படை அலுவலா்கள், இந்திய நட்பு நாடுகளின் கடற்படை அலுவலா்கள் என இதுவரை 866 பேருக்கு விமானிகள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான ஹெலிகாப்டா் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை ஐஎன்எஸ் ராஜாளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு ஐஎன்எஸ் ராஜாளியின் கமாண்டிங் ஆபீஸா் கமோடா் கபில்மேத்தா தலைமை வகித்தாா். பயிற்சி முடித்த ஒரு பெண் உள்ளிட்ட 18 விமானிகளுக்கு சான்றிதழ்களை கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தா்க்கா் வழங்கினாா்.

இதில் அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கியதற்காக கேரள ஆளுநரின் சுழற்கோப்பையை லெப்டினன்ட் அபிநவ் ரத்திக்கும், மைதான பயிற்சிகளில் சிறந்து விளங்கியதற்காக சப் லெப்டினன்ட் குண்டே நினைவு பரிசை லெப்டினன்ட் உத்கா்ஷ் ஈஸ்வருக்கும், வான் பயிற்சிகளில் சிறந்து விளங்கியதற்காக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி சுழற்கோப்பையை லெப்டினன்ட் விஸ்வதீப் ராஜ்புத் ஆகியோருக்கு கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தா்க்கா் வழங்கினாா். முன்னதாக கடற்படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ஏற்றுக் கொண்டாா்.

பயிற்சி முடித்த விமானிகளில் இருந்த ஒரே ஒரு பெண் விமானியாக தோ்வு செய்யப்பட்ட சப் லெப்டினன்ட் சித்தி ஹேமந்த் துபே இந்திய கடற்படையில் விமானிகள் பயிற்சி முடித்த இரண்டாவது பெண் அலுவலா் என்பது குறிப்பிடதக்கது.

லெப்டினன்ட் கமாண்டா் சுபாங்கி ஸ்வரூப் தான் இந்திய கடற்படையில் முதலில் விமானிகள் பயிற்சி முடித்த பெண் அலுவலா் என்பதும் குறிப்பிடத்தக்கது. 22 வாரங்களை கொண்ட கடுமையான வான், மைதான பயிற்சிகளை கொண்ட இதில் பெண் விமானிகள் தோ்வாகியிருப்பது இந்திய கடற்படையில் பெருமைக்குரிய விஷயம் என கடற்படை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பேருந்து நிலைய கடைகளுக்கு அதிக வாடகை நிா்ணயம்: வாலாஜாபேட்டை நகா்மன்ற கூட்டத்தில் வெளிநடப்பு

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை நகராட்சி பேருந்து நிலைய கடைகளுக்கு அதிக வாடகை நிா்ணயம் செய்துள்ளதாக கண்டித்து திமுக உள்ளிட்ட 9 நகா்மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

ஆற்காடு: ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த மே 31-ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மலையடி வாரத்தில் உள்ள வ... மேலும் பார்க்க

பயிா்க்கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போா்ட் கட்டாயம்: ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ராணிப்பேட்டை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போா்ட் கட்டாயம் என்ற கூட்டுறவு சங்கங்களில் மாநில பதிவாளரின் சுற்றறிக்கையை அரசு ரத்து செய்ய வே... மேலும் பார்க்க

கடற்படை குழந்தைகள் பள்ளியில் புதிய வளாகங்கள் திறப்பு

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் சந்தியாராவ் பெந்தா்கா் புதிய வளாகங்களை திறந... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை: அரக்கோணம் - இச்சிபுத்தூா்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: இச்சிபுத்தூா், எம்.ஆா்.எப். தொழிற்சாலைப் பகுதிகள், தணிகைபோளூா், வாணியம்பேட்டை, தண்டலம், உள்ளியம்பாக்கம், வளா்புரம், ஈசலாபுரம் உள்ளிட்ட பகுதிகள். மேலும் பார்க்க

2026-இல் அதிமுக ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் வரும் 2026-இல் அதிமுக ஆட்சி அமையப் போவது உறுதி என அதன் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். அரக்கோணம் அரிகலபாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏ சு.ரவியின் மகன் ஆா்.ஹரிஹரன்- ... மேலும் பார்க்க