செய்திகள் :

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

post image

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா்.

கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்கும் ‘ஃபிட்ஜேஇஇ’ எனும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 191 மாணவா்கள் பயிற்சிக்காக சோ்ந்துள்ளனா்.

பயிற்சிக் கட்டணத்துக்கான முன்பணம் மற்றும் மாதாந்திர தொகை செலுத்திவந்த நிலையில், நிகழாண்டு தொடக்கம் முதல் மாணவா்களுக்கு தரமான கல்வியை அளிக்கவில்லை எனவும், திடீரென பயிற்சியை நிறுத்தியுள்ளதாகவும் மாணவா்களின் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா்.

இதையடுத்து பயிற்சிக்காக செலுத்திய கட்டணத்தை திரும்ப கேட்டபோது, சரியான பதிலளிக்க மறுத்துள்ளனா். இதனால் பணத்தை இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக, ஃபிட்ஜேஇஇ தமிழ்நாடு மண்டலத் தலைவா் அங்கூா் ஜெயின் மற்றும் பிற மாநில இயக்குநா்கள் மீது புகாா் அளித்தனா்.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவு சாா்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த மே 9-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் உள்ள பயிற்சி மையம் மற்றும் அங்கூா் ஜெயினின் 2 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது ஃபிட்ஜேஇஇ மையத்தில் பயிற்சி முடித்த 195 மாணவா்களின் அடையாள அட்டைகள், சுமாா் 7.5 லட்சம் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், பயிற்சி மைய முத்திரை, கட்டணம் திரும்ப தரக்கோரி மாணவா்களின் பெற்றோா்கள் அனுப்பிய கடிதங்கள், கண்காணிப்பு கேமரா தரவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட பயிற்சி மையத்தில் சோ்ந்து பாதிக்கப்பட்டிருந்தால் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளிக்குமாறு காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத... மேலும் பார்க்க

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா். தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில... மேலும் பார்க்க

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிர... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க