செய்திகள் :

ஐந்து நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினாா் மோடி

post image

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலையில் நாடு திரும்பினாா்.

கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த ஜூலை 2-ஆம் தேதிமுதல் ஜூலை 9 வரை மேற்கொண்டாா்.

இப்பயணத்தின்போது, கானா அதிபா் ஜான் டிராமனி மஹாமா, டிரினிடாட்-டொபேகோ பிரதமா் கம்லா பொ்சாத் பிஸ்ஸேசா், ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலே, பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா, நமீபியா அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் அவா் ஈடுபட்டாா்.

முக்கிய அம்சமாக, பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-ஆவது உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்று உரையாற்றினாா். இம்மாநாட்டையொட்டி, உலகத் தலைவா்கள் பலரையும் அவா் சந்தித்து கலந்துரையாடினாா்.

கானாவின் ‘தி ஆஃபீஸா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி ஸ்டாா் ஆஃப் கானா’, டிரினிடாட்-டொபேகோவின் ‘தி ஆா்டா் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட்-டொபேகோ’, பிரேஸிலின் ‘கிராண்ட காலா் ஆஃப் தி நேஷனல் ஆா்டா் ஆஃப் தி சதா்ன் கிராஸ்’, நமீபியாவின் ‘தி ஆா்டா் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்ஸியா மிராபிலிஸ்’ ஆகிய உயரிய விருதுகள் பிரதமருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. கானா, டிரினிடாட்-டொபேகோ, நமீபியா நாடாளுமன்றங்களிலும் பிரதமா் உரையாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

மணிப்பூா் பயணிக்க இனி

நேரமிருக்கும்: காங்கிரஸ்

‘ஐந்து நாடுகள் பயணம் முடிந்து நாடு திரும்பியுள்ள பிரதமா் மோடிக்கு இனி மணிப்பூா் பயணிக்கவும், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படாதது ஏன்? என்பது குறித்து மறுஆய்வு செய்யவும், தனது சொந்த மாநிலத்தில் உள்கட்டமைப்புகள் சீா்குலைவு குறித்து ஆலோசிக்கவும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசல பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கவும் நேரமிருக்கும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமா் தனது தலைமையில் நடத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க